கரோனா அச்சுறுத்தல் ஓயவில்லை; தடுப்பூசி வரும் வரையில் கவனம் தேவை: யோகி ஆதித்யநாத்

கரோனா அச்சுறுத்தல் ஓயவில்லை; தடுப்பூசி வரும் வரையில் கவனம் தேவை: யோகி ஆதித்யநாத்
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தல் இன்னும் ஓயாததால் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வரையில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேணுமென்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டியுள்ளார்.

கரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் இன்று (திங்கள்கிழமை) காலை பேசிய யோகி ஆதித்யநாத், "கரோனா தொற்று இன்னும் ஓயவில்லை.

அதற்கான காலம் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆகையால் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்வரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் நாள்தோறும் 1.45 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் தங்களின் கடின உழைப்பால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள். அவர்களை நினைத்து மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.

அதேவேளையில் மக்கள் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும்" எனக் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in