Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் அருள்பாலித்தார் பத்மாவதி தாயார்

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் தாயார் எழுந்தருளினார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கரோனா பரவலை தடுக்கும் விதத்தில், இந்த ஆண்டு தாயாரின் திருவீதி உலா முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்தது.

அதன்படி, கோயிலுக்குள்ளேயே ஏகாந்தமாக தாயாரின் வாகன சேவை தினமும் நடத்தப்படுகிறது. நாளை 19-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் தாயார் ஏழுமலையான் அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள், தீப, தூப ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், இரவு சந்திரபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் காட்சியளித்து அருள்பாலித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x