ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த 6 வீரர்களின் பெயர்கள் வெளியீடு

ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த 6 வீரர்களின் பெயர்கள் வெளியீடு
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல் காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு `ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா சரியான பதிலடி கொடுத்தது.

இந்த சூழலில் ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த 6 இந்திய வீரர்களின் பெயர்கள் முதல்முறையாக பொதுஅரங்கில் வெளியிடப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தின் சுவரில் அவர்களின் பெயர்கள் 3டி முறையில் பொறிக்கப்பட்டு உள்ளன. இதில் 5 பேர் ராணுவத்தையும், ஒருவர் விமானப் படையையும் சேர்ந்தவர் ஆவார்.

பத்தாவது காலாட்படை படைப் பிரிவு தலைமையகத்தை சேர்ந்த பவன் குமார், ஜம்மு காஷ்மீர் 4-வது பட்டாலியன் லைட் இன்பேன்ட்ரி பிரிவை சேர்ந்த சுனில் குமார், 5-வது பீல்டு ரெஜிமென்ட் பிரிவை சேர்ந்த தினேஷ் குமார், 851 லைட் ரெஜிமென்ட் பிரிவை சேர்ந்த மூத் முரளி நாயக், 237 பீல்டு ஒர்க்சாப் கம்பெனியை சேர்ந்த சுனில் குமார் சிங், இந்திய விமானப் படை 39-வது விங் பிரிவை சேர்ந்த சுரேந்திர குமார் ஆகியோரின் பெயர்கள் தேசிய போர் நினைவிடத்தில் பொறிக்கப்பட்டு உள்ளன. தேசிய போர் நினைவக இணையத்திலும் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த 6 வீரர்களின் பெயர்கள் வெளியீடு
நீட் தேர்வு முடிவு வெளியான பின் கால்நடை படிப்புக்கு கவுன்சலிங்: பல்கலை, துணைவேந்தர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in