Last Updated : 31 Oct, 2020 10:54 AM

 

Published : 31 Oct 2020 10:54 AM
Last Updated : 31 Oct 2020 10:54 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 81 லட்சத்தைக் கடந்தது: குணமடைந்தோர் 74 லட்சமாக அதிகரிப்பு: உயிரிழப்பு அதிகரிப்பு


இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 81 லட்சத்தைக்கடந்தது. குணமடைந்தோர் எண்ணிக்கை 74 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 48 ஆயிரத்து 648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 81 லட்சத்து 37 ஆயிரத்து 119 ஆக அதிகரித்துள்ளது.

இதில் முன்னேற்றம் தரும் விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74 லட்சத்தைக் கடந்து 74 லட்சத்து 32 ஆயிரத்து 829 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 91.24 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 82 ஆயிரத்து 649 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7.16 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தொடர்ந்து 2-வது நாளாக கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 551 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.50 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 127 பேரும், சத்தீஸ்கர், கர்நாடகாவில் தலா 49 பேரும், மேற்கு வங்கத்தில் 59 பேரும், தமிழகத்தில் 38 பேரும், டெல்லியில் 47 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 10 கோடியே 87 லட்சத்து 96 ஆயிரத்து 64 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 67 ஆயிரத்து 976 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40ல ட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50ல ட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x