மகாராஷ்ரா: இரு குழந்தைகளை பெற்றெடுத்த 32 வயது பெண் மருத்துவமனையிலிருந்து மாயம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் இரு குழந்தைகளை பெற்றெடுத்த 32 வயது பெண் மருத்துவமனையிலிருந்து காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஜவஹரில் உள்ள 32 வயதான பெண் ஒருவர் இரட்டையர்களைப் பெற்ற சில நாட்களில் காணாமல் போயுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். படாங்ஷா காட்டேஜ் மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றார்.

இதுகுறித்து ஜவஹர் காவல் நிலைய அதிகாரி கூறியதாவது:

"தஹானுவில் உள்ள மகாலட்சுமி பகுதியைச் சேர்ந்த பெண் அக்டோபர் 6 -ம் தேதி இரட்டையர்களைப் பெற்றிருந்தார். இருப்பினும், அக்டோபர் 10-ம் தேதி இரவு 10 மணியளவில் அவர் மருத்துவமனையில் இருந்து காணாமல் போனார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போனவரின் புகாரை பதிவு செய்தனர். போலீசார் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்

இவ்வாறு காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in