

கரோனாவில் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும் எட்டியது. அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் எட்டியது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து 4-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. ஒட்டுமொத்த பாதிப்பு 77 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,366 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 77,61,312 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஊக்கம் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 69,48,497 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 73,979 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,95,509 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,303 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா வைரஸால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 690 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,17,306 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது