

நாடு முழுவதும் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து யூபிஎஸ்சி விரிவான விளக்கம் அளித்துள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடக்கும்.
இதில் அக்டோபர் 4-ம் தேதி சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. கடந்த மே மாதம் 31-ம் தேதி நடக்க வேண்டிய தேர்வு, கரோனா வைரஸ் பரவலால் ஒத்தி வைக்கப்பட்டது.
கரோனா வைரஸ் பரவல் காலத்தில் தேர்வுகள் நடைபெறுவதால், தேர்வு எழுத வருவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து யூபிஎஸ்சி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இவ்வாறு யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.