‘‘உலக அரங்கில் இந்தியாவின் குரலாக எதிரொலித்தவர் சுஷ்மா ஸ்வராஜ்’’- முதலாமாண்டு நினைவு தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

உலக அரங்கில் இந்தியாவின் குரலாக எதிரொலித்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என அவரது முதலாமாண்டு நினைவு தினத்தில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் முதலமாண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘சுஷ்மா ஸ்வராஜின் முதலமாண்டு நினைவு தினத்தை நினைவு கூறுகிறேன். துரதிருஷ்டவசமாக நிகழ்ந்த அவரது திடீர் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிற்காக சுயநலமின்றி பெரும் சேவையாற்றியவர் அவர். உலக அரங்கில் இந்தியாவின் குரலாக எதிராலித்தவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆவார்’’ எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் மறைவையொட்டி நடந்த இரங்கல் கூட்டத்தின் வீடியோ பதிவையும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in