குடும்பத் தகராறில் 6 மாதத்தில் 554 ஆண்கள் கொலை: தொண்டு நிறுவன ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: ஹரி​யானா மாநிலம் குரு​கி​ராமைச் சேர்ந்த ஏகம் நியாய் அறக்​கட்​டளை என்ற தொண்டு நிறு​வனம், ஊடகங்​களில் வெளி​யான செய்​தி​கள் மற்​றும் தங்​களது கள ஆய்வில் கிடைத்த ஆவணங்​களின் அடிப்​படை​யில் ஜூலை 14 வரை திரட்​டிய புள்​ளி​விவரங்​களை வெளி​யிட்​டுள்​ளது.

அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: ஆண்​களுக்கு எதி​ரான குடும்ப வன்முறைகள் மற்​றும் கணவர்​கள் எதிர்​கொள்​ளும் கொடுமை​கள் குறித்து ஆய்வு நடத்​தப்​பட்​டது. அதன் முடி​வில், கடந்த 6 மாதங்களில் மட்​டும் 322 கணவர்​கள் அவர்​களது மனைவி களாலோ அல்​லது மனை​வி​யின் கள்​ளக்​காதலர் களாலோ ​கொலை செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும், குடும்​பத் தகராறு, பொய் வழக்​கு​, வரதட்​சணை புகார்​கள் போன்ற மன உளைச்​சல்​களால் 232 கணவர்​கள் தற்​கொலை செய்துள்​ளனர்.

இதன் மூலம், இந்​தி​யா​வில் நாளொன்​றுக்கு சராசரி​யாக இரண்டு கணவர்​கள் படு​கொலை செய்​யப்​படு​வதும், ஒரு கணவர் தற்​கொலை செய்​து ​கொள்​வதும் கண்​டறியப்​பட்​டுள்​ளது. கணவர்​கள் படு​கொலை செய்​யப்​பட்ட 322 வழக்​கு​களில், 60.2 சதவீத வழக்குகளுக்கு (194 வழக்​கு​கள்) கள்​ளக்​காதலே முதன்​மைக் காரண​மாக இருந்​துள்​ளது. மனை​வி​யின் கள்​ளக்​காதலை கணவர் கண்​டித்​த​தாலோ அல்​லது அவர்​களின் உறவுக்கு இடையூறாக இருந்​த​தாலோ, கள்​ளக்​காதலனுடன் இணைந்து மனை​வியே கணவரைக் கொலை செய்​யச் சதித்​திட்​டம் தீட்​டியது ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

அதே​போல், பதி​வான 232 கணவர்​களின் தற்​கொலைகளுக்​குப் பின்​னால் இருக்​கும் காரணங்​களும் கண்​டறியப்​பட்​டுள்​ளன. தற்​கொலைகளில் 44.83 சதவீத வழக்​கு​கள் (104 வழக்​கு​கள்) நீண்​ட​கால குடும்​பத் தகராறால் நிகழ்ந்​துள்​ளன. மனைவி மற்​றும் மாமனார் வீட்​டாரின் சித்​ர​வதை காரண​மாக 24.57 சதவீதத்​தினரும் (57 வழக்​கு​கள்), மனை​வி​யின் கள்​ளக்​காதல் விவகாரத்தால் 12.5 சதவீதத்​தினரும் (29 வழக்​கு​கள்) தற்​கொலை செய்துள்ளனர்.

மேலும், பொய் வழக்​கு​கள், காதலி அல்​லது அவரது குடும்பத்தினரின் மிரட்​டல் போன்​றவை​யும் தற்​கொலைகளுக்​குக் காரண​மாக அமைந்​துள்​ளன. பல தற்​கொலைகளில், தங்​களுக்கு நேர்ந்த கொடுமை​கள் குறித்து ஆண்​கள் விரி​வான கடிதம், வீடியோ பதிவு​களை விட்​டுச் சென்​றுள்​ளனர். இதில் உத்​தரப் பிரதேச மாநிலம் முதலிடத்​தில் உள்​ளது.

அங்கு 93 கணவர்​கள் படு​கொலை செய்​யப்​பட்​டுள்​ளனர். 103 பேர் தற்​கொலை செய்​து​கொண்​டுள்​ளனர். இதற்கு அடுத்​த​படி​யாக மத்தி​யப் பிரதேசம், ராஜஸ்​தான், தெலங்​கா​னா, மகா​ராஷ்டி​ரா, ஹரி​யா​னா, பிஹார், கர்​நாடகா மற்​றும் குஜ​ராத் ஆகிய மாநிலங்கள்​ உள்​ளன. இவ்​வாறு ஆய்​வில்​ தெரி​விக்​கப்​பட்​டுள்ளது.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
“முந்தைய திமுக அரசின் ஊழலால் சிஎம்டிஏவில் ஊதியம் வழங்க பணம் இல்லை” - அன்புமணி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in