Published : 20 Mar 2020 10:17 PM
Last Updated : 20 Mar 2020 10:17 PM

கனிகா கபூருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு: உ.பி. சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கரோனா அச்சம்

உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங்

லக்னோ

உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங்கும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா ரைவஸ் தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. கனிகா கபூர் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். பின்னர் அவர் லக்னோ சென்றுள்ளார். லக்னோவில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் கூறவில்லை. எனக்கூறப்படுகிறது.

விருந்து நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் முன்னெச்ரிக்கையாக தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார். இதுபோலவே அவரது மகன் துஷ்யந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இதனால் கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தகவல்களை மறைத்த கனிகாவை தண்டிக்க வேண்டும் என பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் டெரிக் ஓ பிரைன் மார்ச் 18-ம் தேதி நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் சக எம்.பி.யும், வசுந்தரா ராஜேயின் மகனுமானதுஷ்யந்த்திற்கு அடுத்த இருக்கையில் அமர்ந்துள்ளார். அவருடன் அமர்ந்து நாடாளுன்ற நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.

இந்தநிலையில் கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் துஷ்யந்த்அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தி் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘‘துஷ்யந்த்திற்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்தேன். அதனால் முன்னெச்சரிக்கையாக என்னை
தனிமைப்படுத்திக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

இதேபோல் அப்னா தளம் எம்.பி. அனுப்பிரியா படேலும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளாார்.

இதேபோல் கரோனா முன்னெச்சரிக்கையாக உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங்கும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவரும் கனிகா கபூர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். கனிகாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் ஜெய் பிரதாப் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x