

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணியாற்றலாம். மற்ற ஊழியர்கள் 3 விதமான நேரங்களில் பணிக்கு வரலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தும் ஒரே வார்த்தையாக கரோனா வைரஸ் மாறியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலக நாடுகளையே மிரட்டி வருகிறது. இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் கரோனாவின் தொற்று தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசும் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வரும் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் என மக்கள் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி கரோனா வைரஸுக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளார்கள். 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் 169 ரயில்கள் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய பணியாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.