

ஓமன் மன்னர் காபூஸ் அல் சைத் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்று வந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக காபூஸ் பின் சைத் மரணமடைந்ததாக இன்று ( சனிக்கிழமை) ஓமன் அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி, ஓமன் மன்னர் காபூஸ் அல் சைத்துக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓமன் மன்னர் காபூஸ் மறைவைக் கேட்டு நான் வருந்துகிறேன். அன்பான தலைவரை இழந்திருக்கும் ஓமன் மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.