வளைகுடா நாடுகளில் இருந்து 52,360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: டிஜிசிஏ தகவல்

வளைகுடா நாடுகளில் இருந்து 52,360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: டிஜிசிஏ தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: போர்ப் பதற்​றம் நில​வும் வளை​குடா நாடு​களில் இருந்து வெள்​ளிக்​கிழமை இரவு வரை 280 விமானங்​களில், 52,360 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பி​யுள்​ள​தாக டிஜிசிஏ கூறி​யுள்​ளது.

ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதல் நேற்று 8-வது நாளை எட்டியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்ப​தால் வளை​கு​டா​வில் போர்ப் பதற்றம் அதி​கரித்​துள்​ளது. இதனால் வளை​குடா நாடுகளில் இருந்து இந்​தி​யர்​களை மீட்க மத்​திய அரசு நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது.

இந்​நிலை​யில், மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் (டிஜிசிஏ) நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “வளை​குடா நாடு​களில் இருந்து இந்​திய மற்​றும் மத்​திய கிழக்கு விமான நிறு​வனங்​கள் மற்​றும் சிறப்பு விமானங்​கள் மூலம் வெள்​ளிக்​கிழமை இரவு வரை 52,360 பேர் தாயகம் திரும்​பி​யுள்​ளனர். இந்த விமானங்​களில் 184 விமானங்​களை இந்​திய விமான நிறு​வனங்​கள் இயக்​கின. அதைத் தொடர்ந்து 85 ஐக்​கிய அரபு அமீரக (யுஏஇ) விமானங்​களும் 11 சிறப்பு விமானங்​களும் இயக்​கப்​பட்​டுள்​ளன” என்று தெரி​வித்​துள்​ளது.

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் தற்​போது வழக்​க​மான விமானங்​கள் நிறுத்​தப்​பட்​டுள்ள நிலை​யில் இந்​திய விமான நிறு​வனங்​கள் தாங்​கள் பெறும் ஸ்லாட்​களை பொறுத்து விமானங்​களை இயக்​கு​கின்​றன. வளை​குடா பிராந்​தி​யத்​தில் நிலைமை ஸ்திரமற்​ற​தாக இருக்​கும் நிலை​யில் துபாய் விமான நிலை​யம் நேற்று காலை மூடப்​பட்​டது.

இந்​நிலை​யில் ‘எக்​ஸ்’ தளத்​தில் ஐக்​கிய அரசு அமீரகம் நேற்று காலை வெளி​யிட்ட பதி​வில், “து​பாய்க்கு செல்லும், அங்​கிருந்து புறப்படும் அனைத்து விமானங்​களும் நிறுத்தி வைக்கப்​பட்​டுள்​ளன. தயவுசெய்து விமான நிலை​யம் செல்ல வேண்​டாம். இதில் மாற்​றம் இருந்​தால் பகிர்ந்து கொள்​கிறோம்​’’ என்​று தெரி​வித்​துள்​ளது.

வளைகுடா நாடுகளில் இருந்து 52,360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: டிஜிசிஏ தகவல்
மாநிலங்களவை எம்.பி. ஆக நிதிஷ் குமார் ஒப்புக்கொண்டது எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in