

பரேலி
உத்தரபிரதேச மாநிலம் பரேலி யைச் சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோஹி. இவரது மனைவி வைஷாலி, பரேலியில் சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருகிறார்.
7 மாத கர்ப்பமாக இருந்த வைஷாலிக்கு பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே அந்தக் குழந்தை இறந்துவிட்டது.
குழந்தையை புதைப்பதற்காக சிரோஹி, மயானத்தில் 3 அடி ஆழத்தில் பள்ளம் வெட்டியபோது மண்ணில் ஒர பெரிய அளவில் பானை கிடைத்தது. அந்தப் பானையை திறந்து பார்த்தபோது அதில் உயிருடன் ஒரு பெண் குழந்தை மூச்சு விடப் போராடிக் கொண்டிருந்தது.
இதையடுத்து அந்தக் குழந் தையை அருகிலுள்ள மருத்துவ மனையில் சிரோஹி சேர்த்தார்.
இதுகுறித்து பரேலி போலீஸ் எஸ்.பி. அபிநந்தன்சிங் கூறும் போது, “அந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. அந்தப் பெண் குழந்தை யின் சிகிச்சைக்கு தேவையான உதவிகளைச் செய்வதாக பிதாரி சைன்பூர் எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரு கிறது” என்றார். - பிடிஐ