

ஜம்மு
அமர்நாத் யாத்திரை தொடங்கி 22 நாட்களிலேயே 2,85,385 பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 60 நாட்களில் தரிசனம் செய்தவர்களை விடவும் இந்த எண்ணிக்கை அதிகமாகும்.
தெற்கு காஷ்மீரில் உள்ள இமய மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
அனந்த்நாக் மாவட்டத்தில் 36 கி.மீ. தொலைவு கொண்ட பாரம்பரிய பஹல்காம் வழியிலும் கந்தர்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. பால்தால் வழியிலும் யாத்திரை நடைபெறுகிறது.
ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி, 46 நாட்கள் யாத்திரை நடைபெற உள்ளது. யாத்திரைக்கு நாடு முழுவதி லும் இருந்து பல லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். கடந்த ஆண்டு 60 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் யாத்திரை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 22 நாட்களில் 2,85,381 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 60 நாட்களில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 6 பேர் தரிசனம் செய்த நிலையில் இந்த ஆண்டு 22 நாட்களில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 381 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு யாத்திரை வந்த இடத்தில் உடல்நலக்குறைவு, உயரமான மலைப்பகுதியில் ஆக்ஸிஜன்
பற்றாக்குறையால் அடுத்தடுத்து 22 பேர் உயிரிழந்திருந்தனர்.
உயரமான மலைப்பகுதியில் செல்லும்போது முதியவர்கள், பலகீனமானவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு விடுகிறது. இதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை ராணுவப்படையினர் ஆக்ஸிஜன்
அளித்து வருகின்றனர்.