

இரா.வினோத்
பெங்களூரு
காவிரி மேலாண்மை ஆணைய உத்தர வின்படி, காவிரியில் இருந்து தமிழகத் துக்கு விநாடிக்கு 855 கனஅடி நீரினை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத் தில், ‘உச்ச நீதிமன்ற இறுதி உத்தரவின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்து வழங்க வேண்டிய 40.43 டிஎம்சி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும். கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை பொழிவின் அளவை பொறுத்து தமிழகத்துக்கு நீரை திறந்து விடலாம் என உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, கர்நாடக அரசு கடந்த இரு வாரங்களாக காவிரியில் விநாடிக்கு சுமார் 300 கனஅடி முதல் 500 கனஅடி வரை தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டது. கடந்த 5 நாட்களாக குடகில் உள்ள தலைக் காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள் ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வரு கிறது. இதனால், மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத் துக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியை தாண்டியது.
எனவே, முதல்வர் குமாரசாமி மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கும் தமிழகத்துக் கும் காவிரி நீரை திறந்துவிடுமாறு நீர்ப் பாசனத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். இதன்பேரில், நேற்று முன்தினம் இரவு, தமிழகத்துக்கு கபினி அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீரும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 350 கனஅடி நீரும் திறக்கப் பட்டது. இந்த நீர், இரு மாநில எல்லையான பிலிகுண்டுலுவை நேற்று பிற்பகலில் வந் தடைந்தது. இன்னும் இரு தினங்களில் இது மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.