

ஜெயலலிதா வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் மேலும் கூறுகையில், ‘ஜெயலலிதா ஊழல் வழக்கில் விடுதலை பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. இத்தீர்ப்பை எங்கள் கட்சி சார்பில் நான் வரவேற்கிறேன். தமிழகத்தில் எதிர்கட்சியாக பாஜக இருப்பதால் அங்குள்ள அரசியலில் லாப, நஷ்டம் பார்த்து வருத்தம் தெரிவிப்பது சரியாக இருக்காது. இந்த வழக்கின் தீர்ப்பை எந்த அரசியல் உள்நோக்கம், பாரபட்ச மின்றி பார்க்க வேண்டியது அவசியம்’ எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் எதிர்க்்கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு மத்தியில் அதிமுக மறைமுக ஆதரவு தெரிவிப்பதுடன், நாடாளுமன்றத் தில் அமல்படுத்தப்படும் மசோதாக்களுக்கும் ஆதரவாக வாக்களித்து வருவது குறிப் பிடத்தக்கது.