நேபாளத்தில் இந்திய மீட்புப் பணிகளுக்கு பாகிஸ்தான் பாராட்டு

நேபாளத்தில் இந்திய மீட்புப் பணிகளுக்கு பாகிஸ்தான் பாராட்டு
Updated on
1 min read

நிலநடுக்கத்தால் உருக்குலைந்திருக்கும் நேபாளாத்தில் இந்தியா செய்து வரும் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் வியப்படைய செய்வதாக, பிரதமர் மோடியை தொடர்புகொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாராட்டு தெரிவித்தார்.

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 25-ம் தேதி) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்துக்கு 5,500-த்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுடன் உயிர் பிழைத்து நிவாரண உதவியை நாடும் நிலையில் உள்ளனர்.

நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு மறுசீரமைக்கும் பணிகளை விமானப் படையும் ராணுவமும் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் பணி உலக நாடுகளை வியக்க செய்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நிலநடுக்கத்தால் பலியான இந்தியர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

அத்துடன், நேபாளத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் வியப்படைய செய்வதாக கூறி நவாஸ் ஷெரீப் பாராட்டு தெரிவித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்

மேலும் இது குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "இயற்கை சீற்றங்கள் போன்ற சம்பவங்களால் பேரழிவுகள் ஏற்படும்போது நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து சார்க் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்த கூட்டு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பயிற்சி நாம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை முன்னடுக்க வலியுறுத்துகிறேன்" என்று ஷெரீப் உடனான உரையாடலின்போது தெரிவித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in