

தின்சுகியா: அசாம் பேரவை தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தின்சுகியா மாவட்டத்தின் ஜகுன் பகுதியில் போலீஸ் கமாண்டோ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த இடம் அசாம் - அருணாச்சலப் பிரதேசம் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் சிலர் கண் மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி, 5 கையெறி குண்டுகளை வீசினர். இதில் 4 போலீஸார் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.