

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கேலா-கர்சவான் மாவட்டத்துக்குட்பட்ட காண்ட்ரா மற்றும் கண்டேர்பேரா பகுதிகளில் 3 முக்கிய மாவோயிஸ்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவர் பற்றி தகவல் கொடுப்போருக்கு மொத்தம் ரூ.22 லட்சம் பரிசு வழங்கப்படும் என காவல் துறை அறிவித்திருந்தது.
கோப்ரா (சிறப்பு கமாண்டோ படைப் பிரிவு), சிஆர்பிஎப் மற்றும் ஜார்க்கண்ட் காவல் துறையினர் அடங்கிய கூட்டுப் படையினர், உதய்பூரில் ஒரு வீட்டைச் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏகே-47 ரக துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.