மேற்கு வங்க தேர்தல் பாதுகாப்புக்காக 2.4 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீஸார்

மேற்கு வங்க தேர்தல் பாதுகாப்புக்காக 2.4 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீஸார்
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்க தேர்​தல் பாது​காப்​புக்​காக 2.4 லட்​சம் மத்​திய ஆயுதப்​படை போலீ​ஸார்​(சிஏபிஎஃப்) அனுப்​பப்பட உள்​ளனர்.

மேற்கு வங்க சட்​டப் பேர​வை தேர்​தலை சுமுக​மாக நடத்​து​வதற்​கான பணி​களை தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்டு வரு​கிறது. இந்​நிலை​யில் மேற்கு வங்க மாநில தேர்​தல் பாது​காப்​புப் பணி​களுக்​காக 2.4 லட்​சம் சிஏபிஎஃப் போலீ​ஸார் அனுப்​பப்பட உள்​ளனர் என்று தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இவர்​கள் மாநிலம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டுள்ள வாக்​குச்​சாவடிகளில் பாது​காப்​புப் பணி​களில் ஈடு​பட​வுள்​ளனர்.

மேற்கு வங்க மாநிலத்​தில் இது​வரை இல்​லாத அளவுக்கு அதிக எண்​ணிக்​கையி​லான மத்​திய ஆயுதப்​படை போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​களுக்கு நியமிக்​கப்பட உள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இதுகுறித்து தேர்​தல் ஆணைய மூத்த அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “மேற்கு வங்​கத்​தில் வரும் 29-ம் தேதி 2-ம் கட்​டத் வாக்​குப்​ப​திவு நிறைவடைந்​ததும், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வாக்கு எண்​ணும் மையத்​துக்கு பாது​காப்​பாக கொண்டு செல்​லப்​படும். வாக்கு எண்​ணும் மையங்​களுக்கு வெளியே சுமார் 200 கம்​பெனி சிஏபிஎஃப் படை​யினர் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படு​வர்.

அது​மட்​டுமல்​லாமல் சுமார் 500 கம்​பெனி சிஏபிஎஃப் கம்​பெனி படை​யினர், மாநிலம் முழு​வதும் சட்​டம்​-ஒழுங்கை பாது​காக்​கும் பணி​யில் ஈடு​படு​வர்.

அண்​மை​யில் மால்டா மாவட்​டத்​தில் நீதித்​துறை அதி​காரி​களை முற்​றுகை​யிட்டு சில கட்​சி​யினர் ஆர்ப்​பாட்​டம் செய்​துள்​ளனர். அது​போன்ற பிரச்​சினை​கள் மீண்​டும் நடை​பெறாமல் தடுக்க பாது​காப்​புப் பணி​களை ஆயுதப் படை போலீ​ஸார் மேற்​கொள்​வர். மாநிலம் முழு​வதும் சுமார் 2.4 லட்​சம் மத்​திய ஆயுதப் படை போலீ​ஸார் தீவிர பாது​காப்​புப் பணி​யில் இருப்​பர். இதுத​விர மேற்கு வங்க மாநில போலீ​ஸாரும் பாது​காப்​புப்​ பணி​களில்​ ஈடு​படு​வர்​" என்​றார்​.

மேற்கு வங்க தேர்தல் பாதுகாப்புக்காக 2.4 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீஸார்
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in