இந்​தி​யா​வில் 24.8 கோடி பேர் வறுமையி​லிருந்து மீண்​டனர்: யுனிசெப் அமைப்பு பாராட்டு

இந்​தி​யா​வில் 24.8 கோடி பேர் வறுமையி​லிருந்து மீண்​டனர்: யுனிசெப் அமைப்பு பாராட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: உலக குழந்​தைகள் தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்டு யுனிசெப் அமைப்பு வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

தேசிய பன்​முக வறுமைக் குறி​யீட்​டின்​படி, 2013–14 முதல் 2022–23 வரையி​லான காலத்​தில் குழந்​தைகள் உட்பட 24.8 கோடி மக்​கள் வறுமையி​லிருந்து மீள இந்​தியா உதவி செய்​துள்​ளது. இதனால் நாட்​டின் பன்​முக வறுமை விகிதம் 29.2%ல் இருந்து 11.3% ஆகக் குறைந்​துள்​ளது.

சமூகத் துறை முதலீடு​கள் மூலம், இந்​தி​யா​வின் வறுமைக் குறைப்​பில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. போஷான் அபி​யான், சமக்ர ஷிக்‌ஷா, பிஎம் கிசான், மதிய உணவு திட்​டம், பெண் குழந்​தைகளை காப்​போம், பெண் குழந்​தைக்கு கல்வி அளிப்​போம், தூய்மை இந்​தி​யா, ஜல் ஜீவன் திட்​டம் உள்​ளிட்ட திட்​டங்​கள் இந்​தி​யா​வின் வறுமையை ஒழிக்க உதவி உள்​ளது.

உலக அளவில் முன்​னிலை வகிக்​கும் இந்​தி​யா​வின் டிஜிட்டல் பொது உள்​கட்​டமைப்​பானது, ஊட்​டச்​சத்​து, கல்​வி, வரு​மான ஆதர​வு, சுகா​தா​ரம், அனை​வருக்​கும் வங்​கிக் கணக்கு வசதி ஆகிய​வற்றை மிகப்​பெரிய அளவில் வழங்க உதவி உள்​ளது. அதே​நேரம் இந்​தி​யா​வில் உள்ள 20.6 கோடி குழந்​தைகளுக்​கு, வீடு, சுகா​தா​ரம், குடிநீர், ஊட்டச்சத்து, கல்​வி, சுகா​தா​ரம் ஆகிய 6-ல் குறைந்​தது ஒரு வசதி கிடைக்​காத நிலை இன்​னும் நீடிக்​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் 24.8 கோடி பேர் வறுமையி​லிருந்து மீண்​டனர்: யுனிசெப் அமைப்பு பாராட்டு
​முதலீட்​டுக்​காக தாங்​கள் சேமித்து வைத்​துள்ள தங்கத்தை வாடகைக்கு விடும் பணக்காரர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in