Published : 11 Jul 2019 07:11 PM
Last Updated : 11 Jul 2019 07:11 PM
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அதிருப்தி காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகர் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். உச்ச நீதிமன்றம் விதித்த கெடு மாலை 6:00 மணிக்குள் முடிந்ததால் எம்எல்ஏக்கள் ஓடோடி வந்து சபாநாயகரை சந்தித்தனர்.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்த காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கடந்த 6-ம் தேதி ராஜினாமா திடீரென ராஜினாமா செய்தனர்.
அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை பரிசீலித்த பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் 8 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் விதிமுறைக்கு மாறாக இருக்கிறது எனவும், அதை ஏற்க முடியாது எனவும் கூறி நிராகரித்து விட்டார்.
இந்த சூழலில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், ஜேடிஎஸ் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ஆகியோர் இணைந்து கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரபபு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘மும்பையில் தங்கி இருக்கும் எம்எல்ஏக்கள் 10 பேரும் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகரைச் சந்தித்து தங்களின் ராஜினாமா குறித்து முறைப்படி தெரிவிக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து மும்பையில் தங்கியிருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் பெங்களூரு திரும்பினர். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து விதான் சவுதா வந்தபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுது. இதனால் 6 மணிக்குள் அவர்கள் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் சட்டப்பேரவை வளாகத்துக்கு ஓடோடி வந்தனர். ஒவ்வொருவராக வேகமாக வந்து சபநாயகரை சந்தித்தனர். எம்எல்ஏக்கள் வேகமாக வந்து சேரும் வகையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT