பெண் குழந்தைக்கு பெயர் ஜிஎஸ்டி

பெண் குழந்தைக்கு பெயர் ஜிஎஸ்டி
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாவட்டம் கோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பிரசாத். இவருக்கு ஜிஎஸ்டி அமலான ஜூலை 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி பிரசாத் கூறியதாவது:

ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது. வரிப்புரட்சிக்கு வித்திட்ட ஜூலை 1-ம் தேதி எனது மகள் பிறந்தார். அந்த நாளை என்னால் மறக்கமுடியாது. அதனால் நானும் என் மனைவியும் சேர்ந்து எனது மகளுக்கு ஜிஎஸ்டி என பெயர்சூட்டியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜூலை 1-ம் தேதி காலையில் ஜகதீஷின் மனை விக்கு பிரசவ வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 1-ம் தேதி பிறந்து ஜிஎஸ்டி என பெயர்சூட்டப்பட்ட குழந் தையை கிராம மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நேரில் சென்று பார்த்து மகிழ்கின்றனர்.

இதை கேள்விப்பட்ட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, குழந்தை நலமுடன் வாழ ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in