திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் செப். 23-ல் தொடக்கம்

திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் செப். 23-ல் தொடக்கம்
Updated on
1 min read

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 23-ல் தொடங்கி, அக்டோபர் 1 வரை நடைபெறவுள்ளது.

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு தலைமையில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிவாச ராஜு, ‘‘திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 23-ல் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. முக்கிய நிகழ்வான கருட சேவை செப்டம்பர் 27-ம் தேதியும், தேரோட்டம் 30-ம் தேதியும் நடக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறவுள்ளது. கருட சேவை நடக்கும் நாளில் பக்தர்களின் வசதிக்காக 3,000 பேருந்துகள் இயக்கப்படும். பிரம்மோற்சவ நாட்களில் 24 மணிநேரமும் மலைப் பாதை திறந்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in