

நாகாலாந்து மாநிலத்தின் ஆளும் நாகா மக்கள் முன்னணியின் முதல்வராக இருந்தவர் டி.ஆர்.ஜெலியாங். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என இவர் அறிவித்ததற்கு நாகா இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜெலியாங் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி பதவி விலகினார்.
இதையடுத்து புதிய முதல்வ ராக, நாகா மக்கள் முன்னணி யின் தலைவர் லெய்சீட்சு பதவி யேற்றார். அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத நிலையில் அவரது மகன், தான் வெற்றி பெற்ற வடக்கு அங்காமி தொகுதியை விட்டுக் கொடுக்க முன்வந்தார். அவர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து, அந்தத் தொகுதியில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் லெய்சீட்சு போட்டியிட்டு வெற்றி பெற திட்டமிட்டார்.
இந்நிலையில் ஜெலியாங் தனக்கு 41 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்குக் கடிதம் எழுதி னார். இதையடுத்து முதல்வர் லெய்சீட்சு வரும் 15-ம் தேதிக்குள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பி.பி ஆச்சாரியா உத்தரவிட்ட்டார்.
ஆனால் இதற்கு எதிராக குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தில் லெய்சீட்சு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று கூடிய சட்டப்பேரவைக்கு லெய்சீட்சு வரவில்லை. அதே நேரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் சபாநாயகர் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், ஜெலியாங் ஆட்சி அமைக்க ஆளுநர் பிபி ஆச்சாரியா அழைப்பு விடுத்தார். இதையடுத்து நேற்று மாலை 3 மணியளவில் அவருக்கு ஆளுநர் முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் மெஜாரிட்டியை வரும் 22-ம் தேதிக்குள் நிரூபிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். இதற் கிடையே, கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு ஜெலியாங் நீக்கப்பட்டுள்ளதாக, கட்சித் தலைவர் ஹஸ்கா யப்தோமி தெரிவித்தார்.