2000 கைதிகளை விடுவிக்க பஞ்சாப் அரசு திட்டம்

2000 கைதிகளை விடுவிக்க பஞ்சாப் அரசு திட்டம்
Updated on
1 min read

போதை மருந்து தடுப்பு சட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 2000 கைதிகளை விடுதலை செய்ய பஞ்சாப் மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

இது குறித்து அரசு உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சண்டிகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், போதை மருந்துகள் தடுப்புச் சட்டம் வழக்கின் பிரிவுகளான 27, 39 மற்றும் 64-ஏ ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாநில சிறைகளில் சுமார் 15,000 கைதிகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டது.

இவர்களால் அம்மாநில சிறைகளிலும் இட நெரிசல் அதிகமாகி வருவதால் அவர்களில் ஒருபகுதியினரை விடுதலை செய்ய பஞ்சாப் மாநில அரசு யோசனை செய்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in