Published : 30 Sep 2013 11:44 AM
Last Updated : 30 Sep 2013 11:44 AM

பவானி சிங் நீக்கத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக திமுக புகார் கூறியது. இதனை அடுத்து அவரை கர்நாடக அரசு திரும்பப் பெற்றது. கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடக அரசின் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு நடைபெறும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. நீதிபதியின் பதவி நீட்டிப்பு தொடர்பாக மனு செய்திருந்தார் ஜெயலலிதா.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் , இது தொடர்பாக கர்நாடக அரசும் - உயர்நீதி மன்றமும் கலந்து பேசி முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x