Published : 11 Apr 2014 12:45 PM
Last Updated : 11 Apr 2014 12:45 PM

ஜார்க்கண்டில் கண்ணி வெடி தாக்குதல்

ஜார்க்கண்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்பாக, மாவோயிஸ்டுகள் தொடர் கண்ணிவெடித்தாக்குதல்களை நடத்தினர்.

பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சிறிய துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இது தொடர்பாக லடேகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மைக்கேல் எஸ் ராஜ் கூறியதாவது:

பர்வாடி காவல்நிலையத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அதிகாலை 1.30 மணிக்கு 6 கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்தனர். மேலும், பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையிலும் ஈடுபட்டனர். இதில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தலைப் புறக்கணிக்கும்படி மக்களை மாவோயிஸ்டுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x