

பிரதமர் நரேந்திர மோடி, வெளி நாட்டு பயணத்தின் முதல்கட்டமாக இன்று வியட்நாம் செல்கிறார். அங்கு அந்நாட்டு தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து, சீனாவுக்குச் செல்லும் அவர், ஹாங்சூ நகரில் வரும் 4 மற்றும் 5-ம் தேதி நடை பெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் தீவிரவாத அமைப்புகள் நிதி திரட்டுவது மற்றும் வரி ஏய்ப்பை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக் கப்பட உள்ளது. மாநாட்டுக்கு நடுவே, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
பின்னர் 5-ம் தேதி தாயகம் திரும்பும் அவர், 2 நாள் பயணமாக லாவோஸ் செல்கிறார். அங்கு நடைபெறும் இந்தியா-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா உச்சி மாநாடுகளில் பங்கேற்கிறார்.