பாலியல் வழக்கு: தலைமறைவாக இருந்த சாமியாரின் மகன் கைது

பாலியல் வழக்கு: தலைமறைவாக இருந்த சாமியாரின் மகன் கைது
Updated on
1 min read

பாலியல் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் டெல்லி சிபிசிஐடி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். நாராயண் சாய் கடந்த 59 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரைத் தேட்டி வந்த போலீசார் இன்று காலையில் அவரை டெல்லி- ஹரியானா எல்லையில் வைத்து கைது செய்தனர்.

வழக்கின் பின்னணி:

சூரத்தைச் சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் சாமியார் ஆசாராம் பாபு, அவரது மகன் நாராயண் சாய் ஆகிய இருவர் மீதும் வழக்கு உள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நாராயண் சாய் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சூரத்தைச் சேர்ந்த இளம்பெண் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே நாராயண் சாய் போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

சாமியார் ஆசாராம் மீது ஏற்கெனவே ஜோத்பூரைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆசாராம் பாபு மீதும் சூரத் சகோதரிகளில் மூத்தவர் புகார் அளித்திருந்தார். ஆசரமத்தில் தங்கியிருந்த தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணைக்காக ஆமதாபாத் அழைத்துச் செல்லப்பட்ட ஆசாராம் பின்னர் மீண்டும் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in