2020 டெல்லி கலவர வழக்கு: அறிவார்ந்த தீவிரவாதிகள் ஆபத்தானவர்கள் - உச்ச நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் வாதம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: அறி​வார்ந்த தீவிர​வா​தி​கள் ஆபத்​தானவர்​கள். எனவே 2020 டெல்லி கலவர வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட உமர் காலித், ஷார்​ஜில் இமா​முக்கு முன்​ஜாமீன் வழங்​கக்​கூ​டாது என்று உச்ச நீதி​மன்​றத்​தில் டெல்லி போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

சிஏஏ சட்​டத்தை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் டெல்​லி​யில் நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 53 பேர் உயி​ரிழந்​தனர். 700-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர். இந்த வழக்​கில் டெல்லி ஜவஹர்​லால் நேரு பல்​கலைக்​கழக மாணவர் சங்க நிர்​வாகி​கள் உமர் காலித், ஷார்​ஜில் இமாம் ஆகியோர் மீது குற்​றம் சாட்​டப்​பட்டு உள்​ளது.

டெல்லி திஹார் சிறை​யில் உள்ள இரு​வரும் ஜாமீன் கோரி விசா​ரணை நீதி​மன்​றம், உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். அவர்​களின் மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்ட நிலை​யில் தற்​போது உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​துள்​ளனர்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் அரவிந்த் குமார், அஞ்​சா​ரியா அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது டெல்லி போலீஸ் தரப்​பில் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் எஸ்​.​வி.ராஜு ஆஜரா​னார். அவர் கூறிய​தாவது:

வடகிழக்கு மாநிலங்​களை​யும் இந்​தி​யா​வை​யும் இணைக்​கும் கோழிக் கழுத்து பகு​தியை முஸ்​லிம்​கள் ஒன்​றிணைந்து துண்​டிக்க வேண்​டும் என்று ஷார்​ஜில் இமாம் பேசி​னார். இதே​போல உமர் காலித்​தும் வன்​முறை, கலவரத்தை தூண்​டும் வகை​யில் பேசி சமூக ஒற்​றுமையை சீர்​குலைத்​தார். இரு​வரும் நாட்​டின் நலனுக்கு எதி​ரான செயல்​களில் ஈடு​பட்​டனர். அறி​வார்ந்த தீவிர​வா​தி​கள் மிக​வும் ஆபத்​தானவர்​கள். எனவே உமர் காலித், ஷார்​ஜில் இமா​முக்கு முன்​ஜாமீன் வழங்​கக்​கூ​டாது. இவ்​வாறு கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் எஸ்​.​வி.ராஜு வாதிட்​டார்.

முன்​ன​தாக சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்​தா​வும் இதே கருத்தை முன்​வைத்​தார். அவர் கூறும்​போது, “டெல்லி கலவரம் முன்​கூட்​டியே திட்​ட​மிட்டு அரங்​கேற்​றப்​பட்டு இருக்​கிறது. சமூகத்​தில் பிரி​வினையை ஏற்​படுத்த முயற்சி மேற்​கொள்​ளப்​பட்​டது. இரு​வருக்​கும் ஜாமீன் வழங்​கக்​கூ​டாது” என்று தெரி​வித்​தார்.

உமர் காலித், ஷார்​ஜில் இமாம் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர் சித்​தார்த் தாவே கூறும்​போது, “வீடியோக்​களின் குறிப்​பிட்ட பகு​தியை மட்​டும் வைத்து டெல்லி போலீ​ஸார் வாதிடு​கின்​றனர். அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் வரு​கை​யின்​போது திட்​ட​மிட்டு கலவரம் நிகழ்த்​தப்​பட்​ட​தாக குற்​றம் சாட்​டு​கின்​றனர். சிஏஏ சட்​டத்தை எதிர்த்து மட்​டுமே உமரும் ஷார்​ஜிலும் போராடினர். கலவரத்​தில் இரு​வருக்​கும் தொடர்பு கிடை​யாது. அவர்​களுக்கு ஜாமீன் வழங்க வேண்​டும்” என்று வா​திட்​டார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள்​, வழக்​கு வி​சா​ரணை தொடர்ந்​து நடை​பெறும்​ என்​று தெரி​வித்​தனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in