Last Updated : 18 Sep, 2016 02:02 PM

 

Published : 18 Sep 2016 02:02 PM
Last Updated : 18 Sep 2016 02:02 PM

வீரர்கள் முகாம்களுக்கு தீ வைத்து பிறகு தாக்குதல்: காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதல் கூடுதல் தகவல்

காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் உரி என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம்களுக்கு பயங்கரவாதிகள் முதலில் தீ மூட்டினர், இதனையடுத்து வெளியே வந்த வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டாலும் இன்னும் 2-3 தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு 17 வீரர்கள் பலியாக 30 பேர் காயமடைந்துள்ளனர். பலியான வீரர்கள் 6 பிஹார் ரெஜிமெண்டைச் சேர்ந்தவர்கள்.

இன்று காலை கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கருகே 6 கிமீ தொலைவில் உள்ள ராணுவ முகாம்களுக்கு தீவிரவாதிகள் தீ வைத்ததாகவும் இதனையடுத்து வெளியே வந்த வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தீக்காயங்கள் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையை வைத்து இந்த தீவைப்பு சம்பவம் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x