காசி தமிழ்ச் சங்கமத்துக்கு 2,000 போலீஸார் பாதுகாப்பு

காசி தமிழ்ச் சங்கமத்துக்கு 2,000 போலீஸார் பாதுகாப்பு
Updated on
1 min read

வாராணசி: உத்தர பிரதேசம் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தொடர்ந்து நான்காவது ஆண்டாக கடந்த 2-ம் தேதி முதல் வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாராணசி காவல்துறை துணை ஆணையர் சரவணன் தங்கமணி கூறியதாவது:

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் 80,000 முதல் 1 லட்சம் பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 2 ஆயிரம் போலீஸார் 15 நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதற்காக 3 கம்பெனி ரிசர்வ் போலீஸார், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் நமோ காட் பகுதியை ஒட்டியுள்ள கங்கை நதியில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள 4 அதிவிரைவு படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தப் படகுகள் 8 கி.மீ தூரத்தை 7 நிமிடங்களில் கடந்து செல்லும். பாதுகாப்பு பணியில் 10 ட்ரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சரவணன் கூறினார்.

காசி தமிழ்ச் சங்கமத்துக்கு 2,000 போலீஸார் பாதுகாப்பு
இண்டிகோ விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in