தெலங்கானா டிஜிபி முன்னிலையில் நக்சலைட்கள் 20 பேர் சரண்

தெலங்கானா டிஜிபி முன்னிலையில் நக்சலைட்கள் 20 பேர் சரண்
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் மாநில காவல்​துறை இயக்​குநர் சிவதர் ரெட்டி முன்​னிலை​யில் 20 நக்​சலைட்​கள் ஆயுதங்​களு​டன் சரண் அடைந்​தனர்.

தெலங்​கா​னா​வில் நக்​சலைட்​களின் கொரில்லா படை தலை​வ​ராக செயல்​பட்டு வந்த தேவா, கமாண்​டர் படை செய​லா​ளர் ராஜா ரெட்​டி, இவரது மனைவி உள்​ளிட்ட 20 நக்​சலைட்​கள் ஆயுதங்​கள் மற்​றும் ரூ.20 லட்​சம் ரொக்​கப் பணத்​துடன் தெலங்​கானா மாநில காவல்​துறை இயக்​குநர் சிவதர் ரெட்டி முன்​னிலை​யில் சரண் அடைந்​தனர். அப்​போது வெடிகுண்​டு​கள், பல்​வேறு வகை துப்​பாக்​கி​கள் உள்​ளிட்ட ஆயுதங்​களை ஒப்​படைத்​தனர்.

இதுகுறித்து டிஜிபி சிவதர் ரெட்டி கூறிய​தாவது: பிஎல்​ஜிஏ நக்​சலைட்​கள் குழு​வில் 400 பேர் இருந்​தனர். தற்​போது 66 பேர் மட்​டுமே உள்​ளனர். மற்​றவர்​களில் பலர் உயி​ரிழந்​தனர். மேலும் பலர் சரண் அடைந்​துள்​ளனர்.

முதல்​வர் ரேவந்த் ரெட்​டி​யின் உத்​தர​வின் பேரில், சரண் அடைந்த நக்​சலைட்​கள் அனை​வருக்​கும் பொது மன்​னிப்பு வழங்​கப்​படு​கிறது. நக்​சலைட்​கள் அனை​வரும் தங்​களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்​டும். இந்த இயக்​கம் தேவை​தானா என்​பதை அவர்​கள் சிந்​திக்க வேண்​டும்.

சரண் அடைந்த நக்​சலைட்​களுக்கு ரூ.1.80 கோடி நிதி உதவி வழங்​கப்​படும். உடனடி உதவி​யாக அனை​வருக்​கும் தலா ரூ.1 லட்​சம் வழங்​கப்​படும். இது​வரை தெலங்​கா​னா​வில் 576 நக்​சலைட்​கள் சரண் அடைந்​துள்​ளனர். 17 பேர் மட்​டுமே தலைமறை​வாக உள்​ளனர். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

தெலங்கானா டிஜிபி முன்னிலையில் நக்சலைட்கள் 20 பேர் சரண்
நள்ளிரவில் குடிபோதையில் திருப்பதி கோவிந்தராஜர் கோயில் கோபுரம் மீது ஏறிய நபர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in