நள்ளிரவில் குடிபோதையில் திருப்பதி கோவிந்தராஜர் கோயில் கோபுரம் மீது ஏறிய நபர் கைது

நள்ளிரவில் குடிபோதையில் திருப்பதி கோவிந்தராஜர் கோயில் கோபுரம் மீது ஏறிய நபர் கைது
Updated on
1 min read

திருப்பதி: திருப்​பதி கோவிந்​த​ராஜர் கோயி​லின் முகப்பு கோபுரம் மீது குடி​போதை​யில் ஏறிய நபரை போலீ​ஸார் மற்​றும் தீயணைப்பு படை​யினர் சுமார் 3 மணி நேரம் போராடி கீழே இறக்​கினர்.

ஆந்​தி​ரா​வின் ஆன்​மிக நகர​மான திருப்​ப​தி​யின் மையப்​பகு​தி​யில் பிரசித்தி பெற்ற கோவிந்​த​ராஜர் திருக்​கோ​யில் அமைந்​துள்​ளது. சுமார் 50 அடி உயர ராஜ கோபுர​மும், மிகப்​பெரிய மதில் சுவர்​களும் கொண்ட திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் முக்​கிய கோயில்​களில் இது​வும் ஒன்​றாகும்.

இந்​நிலை​யில், இக்​கோயி​லில் நேற்று முன்​தினம் இரவு ஏகாந்த சேவைக்கு பிறகு பக்​தர்​கள் அனை​வரும் கோயிலை விட்டு வெளியே சென்​றதும் நடை அடைக்​கப்​பட்​டது. சிறிது நேரத்​தில் சுமார் 50 அடி உயர முகப்பு கோபுரத்​தின் மீது ஒரு நபர் இருப்​பதை அங்​கிருந்​தவர்​கள் பார்த்து அதிர்ச்சி அடைந்​தனர். அந்த நபரை கீழே இறங்கி வரு​மாறு பாது​காப்பு பணி​யில் இருந்​தவர்​கள் வலி​யுறுத்​தினர். ஆனால் அவர் அதை கேட்​க​வில்​லை.

பிறகு போலீ​ஸார், தேவஸ்​தான விஜிலென்ஸ் அதி​காரி​கள், தீயணைப்பு படை​யினர் என பலரும் ஒன்​றுகூடி அவரை அழைத்​த​போதும் அவர் கீழே வர மறுத்து விட்​டார். மேலும் அந்த நபர் அங்​கிருந்த கலசங்​களை சேதப்​படுத்த தொடங்​கி​னார். இதையடுத்து தீயணைப்பு படை​யினர் கோபுரத்​தின் மேலே சென்று கயிற்றை கட்டி அதன் மூலம் அந்த நபரை கீழே கொண்டு வந்​தனர். பின்​னர் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், அந்த நபர் தெலங்​கானா மாநிலம், நிஜா​மா​பாத் மாவட்​டம், பெத்​தமல்லா ரெட்டி காலனியை சேர்ந்த திருப்​பதி என்​பதும் மது​போதை​யில் கோபுரம் மீது ஏறியதும் தெரிய​வந்​தது. அவரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

கோவிந்​த​ராஜ பெரு​மாள் கோயி​லில் தேவஸ்​தான விஜிலென்ஸ் அதி​காரி​கள் மற்​றும் போலீ​ஸார் 24 மணி நேர​மும் பாது​காப்பு பணி​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில் பாது​காப்பு குறை​பாடு தொடர்​பாக தேஸ்​தான முன்​னாள் அறங்​காவலர் குழு தலை​வரும் திருப்​பதி முன்​னாள் எம்​எல்​ஏவு​மான கருணாகர்​ ரெட்​டி கேள்​வி எழுப்​பி​யுள்​ளார்​.

நள்ளிரவில் குடிபோதையில் திருப்பதி கோவிந்தராஜர் கோயில் கோபுரம் மீது ஏறிய நபர் கைது
புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக காங். சார்பில் ஜன.8 முதல் நாடு தழுவிய போராட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in