கேரளாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது

பாலியல் வழக்கில் மேலும் 6 பேர் பிடிபட்டனர்
கேரளாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் அருகே உள்ள காரிய​வட்​டத்​தில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

கேரள தீவிர​வாத எதிர்ப்புப் படை​யினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில், திரு​வனந்​த​புரத்​தின் கழக்கூட்டம் காவல் துறை​யினர் காரிய​வட்​டத்​தில் உள்ள ஒரு வாடகை வீட்​டில் புதன்​கிழமை இரவு சோதனை நடத்​தினர். அப்போது சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 2 வங்​கதேச பெண்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

கடந்த ஒரு மாத​மாக திரு​வனந்​த​புரத்​தில் தங்​கி​யிருந்த இந்த 2 பெண்​களும், ஒரு பாலியல் கும்​பலுக்​காக வேலை செய்து வந்ததாக காவல்​துறை கூறி​யுள்​ளது. இந்த சோதனை​யின்​போது, அந்த 2 வங்​கதேசப் பெண்கள் தவிர, அங்​கிருந்த மேலும் 6 பேரை போலீ​ஸார் விசா​ரணைக்​காக அழைத்​துச் சென்​றனர்.

தனித்தனி வழக்குகள் இந்​தக் குழு​வினர் இந்த மாத தொடக்கத்தில் தங்​களை ‘மருத்​து​வர்​கள்' என்று பொய்​யாகக் கூறி அந்த வீட்டை வாடகைக்கு எடுத்​துள்​ளது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, 2 வங்கதேசப் பெண்கள் மீதும் சட்டவிரோதமாக தங்கியதற்கும், மற்றொன்று பாலியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் என தனித்தனி வழக்குகள்

பதிவு செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சமீபத்தில் திரு​வனந்​த​புரத்​தில் உள்ள ஒரு ஸ்பா-​வில் இருந்​தும் 2 வங்​கதேசப் பெண்​களை காவல் துறை கைது செய்​திருந்​தது. போலி ஆவணங்​கள் மற்​றும் அடை​யாள அட்​டைகளைப் பயன்​படுத்தி மாநிலத்​தில் சட்​ட​ விரோத​மாகத் தங்​கி​யிருப்பதாகக் கூறப்படும் வங்​கதேச நாட்​டினருக்கு எதி​ரான நடவடிக்​கைகளை காவல் துறை தீவிரப்​படுத்தி உள்​ள​தாக அதி​காரி​கள்​ தெரிவித்துள்​ளனர்.

கேரளாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது
திமுக ‘கூட்டணி’ ஆட்சியா? - கருத்துக் கணிப்பு முடிவுகள் மீதான விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in