ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி வாதம்

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி வாதம்
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதிட்டு வருகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டு வருகிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி ராம் ஜெத்மலானி வாதிட்டு வருகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளை ஜெத்மலானி மேற்கோள்காட்டி வாதிட்டார்.

இதற்கிடையில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வழக்கறிஞர் பவானி சிங் எதிர் மனு தாக்கல் செய்துள்ளார். இருதரப்பிலும் காரசார விவாதங்கள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in