கோவா மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மனோகர் பாரிக்கர்

கோவா மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மனோகர் பாரிக்கர்
Updated on
1 min read

கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17, பாஜக 13 இடங்களைக் கைப்பற்றின. பெரும்பான்மையை நிரூபிக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் இரு கட்சிகளும் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டன.

மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி ஆகியவை தலா 3 தொகுதிகளைக் கைப்பற்றின. இவை தவிர 3 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் முதல்வராகப் பதவியேற்றால் ஆதரவு அளிக்கத் தயார் என்று மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் தெரிவித் தனர். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏ சர்ச்சிலும் பாஜகவுக்கு ஆதரவு அளித்தார்.

இந்நிலையில் பாஜக புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் பனாஜியில் நேற்று நடைபெற்றது. இதில் மனோகர் பாரிக்கரை கட்சி யின் சட்டப்பேரவைத் தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர் நேற்று மாலை கோவா மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதன்பின் மனோகர் பாரிக்கர் கூறும்போது, ‘இதர கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை எட்டியுள்ளோம்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in