

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவரது புத்தகங்களில் வெளியிட்டார். இதனால் முஸ்லிம் அடிப்படைவாதிகள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து, கடந்த 1994-ம் ஆண்டு இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து வரும் அவர், குறிப்பாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசிப்பதையே பெரிதும் விரும்பு வார். சுவீடன் குடியுரிமை பெற்ற தஸ்லிமா, கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்தியாவில் வசிக்க விசா பெற்றார். இந்நிலையில், அவரது விசா காலம் வரும் ஜூலை 22-ம் தேதியுடன் முடிகிறது.
இந்நிலையில் அவரது விசா காலத்தை ஒரு ஆண்டுக்கு மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.