கருப்புப் பணப் பட்டியல் வெளியாகும்போது காங்கிரஸ் தலைகுனியும்: அருண் ஜேட்லி

கருப்புப் பணப் பட்டியல் வெளியாகும்போது காங்கிரஸ் தலைகுனியும்: அருண் ஜேட்லி
Updated on
1 min read

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளோரின் பெயர்ப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும், அப்போது காங்கிரஸ் தலைகுனிய நேரிடும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கருப்புப் பண பட்டியலை வெளியிடாதது ஏன் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தப் பட்டியல் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்மூலம் பொதுமக்களுக்கும் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் தெரியவரும். பாஜகவை பொறுத்தவரை எங்கள் தலைவர்கள் யாரும் சுவிஸ் வங்கியில் கருப்புப் பணத்தை முதலீடு செய்யவில்லை. ஆனால் மக்கள் மன்றத்தில் பட்டியல் வெளியாகும்போது அதில் உள்ள சில பெயர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in