

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி, மகள் டெல்லியில் நேற்று தற்கொலை செய்து கொண்டனர்.
மத்திய அரசின் நிறுவனங்கள் விவகாரத் துறையின் பொது இயக்குநர் பி.கே. பன்சால். டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு இவர் ரூ.9 லட்சம் லஞ்சம் வாங்கியபோது சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பன்சாலின் மனைவி சத்யபாலா (59), மகள் நேகா (27) ஆகியோர் டெல்லியில் உள்ள வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை குறித்து டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.