சிஐசி உத்தரவிட்டும் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கறுப்பு பண விவரங்களை வழங்க பிரதமர் அலுவலகம் மறுப்பு

சிஐசி உத்தரவிட்டும் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கறுப்பு பண விவரங்களை வழங்க பிரதமர் அலுவலகம் மறுப்பு
Updated on
1 min read

மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டிருந்த போதிலும், வெளிநாடுகளில் இருந்து மீட் கப்பட்ட கறுப்பு பணம் பற்றிய விவ ரங்களை வழங்க பிரதமர் அலுவல கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது, வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் முதலீடு செய்யப் பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்போம் என பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, மோடி பிரதமரானார்.

இந்நிலையில், இந்திய வன சேவை (ஐஎப்எஸ்) அதிகாரி சஞ்சய் சதுர்வேதி, தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு மனுவை அனுப்பினார். அதில், வெளிநாடுகளிலிருந்து எவ்வளவு கறுப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வழங்குமாறு கோரியிருந்தார். ஆனால், இது ஆர்டிஐ சட்ட வரம்புக்குள் வராது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் அலுவலகம் பதில் அனுப்பியது.

இதுகுறித்து மத்திய தகவல் ஆணையத்தில் சதுர்வேதி மேல் முறையீடு செய்தார். இதை விசா ரித்த ஆணையம், மனுதாரர் கோரும் விவரத்தை 15 நாட்களுக் குள் வழங்குமாறு பிரதமர் அலு வலகத்துக்கு கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பிரதமர் அலு வலகம் அளித்துள்ள பதிலில், “வெளிநாடுகளில் பதுக்கப்பட் டுள்ள கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசா ரணைக் குழு (எஸ்ஐடி) அமைக் கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான விவரத்தை தெரிவித்தால் அது விசாரணையை பாதிக்கும். எனவே, மனுதாரர் கோரும் தகவலைத் தெரிவிக்க முடியாது. மேலும் அரசின் பல் வேறு புலனாய்வு மற்றும் பாது காப்பு அமைப்புகளின் கீழ் நடை பெறும் இதுபோன்ற விசாரணை விவரங்களுக்கு ஆர்டிஐ சட்டத்தி லிருந்து விலக்கு அளிக்கப்பட் டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

சதுர்வேதியின் மற்றொரு மனுவுக்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில், “மத்திய அமைச்சர்களுக்கு எதிராக பெறப் பட்டுள்ள ஊழல் புகார்கள் பற்றிய விவரங்களைத் தர முடியாது” என கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in