உ.பி.யில் திருமண ஊர்வல இசைக் கச்சேரியில் அதிக ஓசையால் 140 கோழிகள் உயிரிழப்பு

உ.பி.யில் திருமண ஊர்வல இசைக் கச்சேரியில் அதிக ஓசையால் 140 கோழிகள் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: உ.பி.​யில் ஒரு கோழிப்​பண்​ணை​யில் 140 கோழிகள் இறந்​தது தொடர்​பாக இசைக் கச்​சேரி நிர்​வாகி மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கச்​சேரி​யின் அளவுக்கு அதி​க​மான ஓசை​யால் கோழிகள் மாரடைப்​பால் இறந்​த​தாக காரணம் கூறப்படு​கிறது.

உ.பி.​யில் திருமண நிகழ்ச்​சி​யின் மாப்​பிள்ளை ஊர்​வலத்​தில் டிஜே எனும் இசைக் கச்​சேரி இடம்​பெறு​வது வழக்​கம். இந்​நிலை​யில் உ.பி.​யின் சுல்​தான்​பூர் மாவட்​டம், தரி​யாபூர் கிராமத்​தில் கடந்த ஏப்​ரல் 25-ம் தேதி ஒரு திருமண ஊர்​வலம் டிஜே கச்சேரியுடன் நடை​பெற்​றது. அதில் கிளம்​பிய அளவுக்கு மீறிய ஓசை அதன் வழி​யில் உள்ள ஒரு கோழிப்​பண்​ணை​யில் பாதிப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

கச்​சேரி​யின் ஓசை தாங்​காமல் இங்கு 140 கோழிகள் இறந்​தன. இது தொடர்​பாக தரி​யாபூர் காவல் நிலை​யத்​தில் கோழிப்​பண்ணை உரிமை​யாளர் சாபீர் அலி, புகார் அளித்​தார். இதையடுத்து உயி​ரிழந்த கோழிகளுக்​கான உடற்​கூறு ஆய்வு நடத்​தப்​பட்​டது. இதில் டிஜே இரைச்​சல் கோழிகளுக்கு பெரும் பீதியை ஏற்​படுத்​தி​ய​தாக​வும் இதனால் ஏற்​பட்ட மாரடைப்​பால் 140 கோழிகள் இறந்​த​தாக​வும் தெரிய​வந்​தது.

இதுகுறித்து உடற்​கூறு ஆய்வு நடத்​திய தலைமை கால்​நடை மருத்துவ அதி​காரி பிரமோத் சர்மா கூறுகை​யில், “திருமண ஊர்​வலத்​தின் டிஜே வாக​னம் கோழிப்​பண்​ணையை கடந்து சென்​ற​போது, அதிலிருந்து வெளி​யான உரத்த இரைச்​சலும் அதிர்​வு​களும் அங்​கிருந்த கோழிகளைப் பெரிதும் மிரளச் செய்​தது. இந்​தத் திடீர் பீதி காரண​மாக கோழிகள் மிரண்​டு​போய், கண் இமைக்​கும் நேரத்​தில் 140 கோழிகள் உயி​ரிழந்​துள்​ளன.

மாரடைப்பு காரண​மாக உயி​ரிழந்த கோழிகளுக்​கு, உரத்த இரைச்சலும், அதனால் ஏற்​பட்ட மன அழுத்​தச் சூழலும் தாங்க முடி​யாமல் போய் உள்​ளது. இதுவே கோழிகளின் உயி​ரிழப்​புக்கு ஒரு முக்​கியக் காரண​மாக அமைந்​திருக்​கலாம்” என்​றார்.

வழக்குப் பதிவு

இந்த உடற்​கூறு ஆய்​வறிக்​கை​யின் அடிப்​படை​யில் டிஜே இசைக் கச்​சேரி நிர்​வாகி கவி யாதவ் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரணையை தொடங்​கி​யுள்​ளனர். வினோத​மான இந்தப் புது​வித வழக்கு உ.பி.யில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.யில் திருமண ஊர்வல இசைக் கச்சேரியில் அதிக ஓசையால் 140 கோழிகள் உயிரிழப்பு
மேற்கு வங்க வாக்காளர்கள் கருத்து சொல்ல மறுப்பு: ஆக்சிஸ் மை இந்தியா தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in