மெகா கூட்டணி உடையும்: முக்தர் அப்பாஸ் கருத்து

மெகா கூட்டணி உடையும்: முக்தர் அப்பாஸ் கருத்து
Updated on
1 min read

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணிக்கும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதுகுறித்து, பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று கூறியதாவது: பிஹாரில் எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணிக்குள் மோதல்களும் பல்வேறு முரண்பாடுகளும் உள்ளன. இதனால் அந்தக் கூட்டணி உடைந்துவிடும். தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சுயநலம் இருக்கக் கூடாது. அரசியல் புரிதல் இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.

கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்தது. ஆனாலும், பிரதமர் நரேந்திர மோடி கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி பற்றி குறை கூறும் எதிர்க்கட்சிகள், அவரிடமிருந்து கூட்டணி அரசியல் கொள்கைகளை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in