மகாராஷ்டிராவில் என்கவுன்ட்டர்: பெண் நக்சலைட்டுகள் இருவர் சுட்டுக் கொலை!

மகாராஷ்டிராவில் என்கவுன்ட்டர்: பெண் நக்சலைட்டுகள் இருவர் சுட்டுக் கொலை!
Updated on
1 min read

கட்சிரோலி: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எட்டப்பள்ளி தாலுகாவில் உள்ள கட்டா ஜம்பியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொடஸ்கே கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் கட்டா தலம் நக்சலைட் உறுப்பினர்கள் முகாமிட்டுள்ளதாக கட்சிரோலி காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அஹேரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சத்ய சாய் கார்த்திக் தலைமையில், அஹேரியைச் சேர்ந்த ஐந்து சி-60 கமாண்டோ பிரிவுகளுடன், கட்டா ஜம்பியா காவல் நிலைய போலீசார் மற்றும் 191 பட்டாலியனின் சிஆர்பிஎஃப்-இ கம்பெனியைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை தொடங்கினர்.

இந்தக் குழுக்கள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியவுடன், நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு சி-60 கமாண்டோக்கள் பதிலடி கொடுத்தனர். என்கவுன்டருக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திலிருந்து இரண்டு பெண் நக்சலைட்டுகளின் உடல்களையும், ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு அதிநவீன கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் ஏராளமான நக்சல் இலக்கிய புத்தகங்களை மீட்டனர்.

மேலும், வேறு எந்த நக்சல்களும் அந்தப் பகுதியில் மறைந்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து அப்பகுதியில் சோதனைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in