இ-டிக்கெட் பெறும் ரயில் பயணிகளுக்கு 45 பைசாவில் பயணக் காப்பீடு

இ-டிக்கெட் பெறும் ரயில் பயணிகளுக்கு 45 பைசாவில் பயணக் காப்பீடு
Updated on
1 min read

புதுடெல்லி: மக்​களவை​யில் உறுப்​பினரின் கேள்விக்கு ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: குடிமக்​கள் ஆன்​லைனில் அல்​லது முன்​ப​திவு கவுண்​டர்​களில் ரயில் டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்​ய​லாம்.

இருப்​பினும் ஆன்​லைனில் முன்​ப​திவு செய்​து, பயணம் உறுதி செய்​யப்​படும் மற்​றும் ஆர்​ஏசி பயணி​களுக்கு மட்​டுமே காப்​பீட்டு சலுகை கிடைக்​கும். காப்​பீட்டு சலுகையை பெற​விரும்​பும் எந்​தவொரு பயணி​யும் டிக்​கெட் முன்​ப​திவு செய்​யும்​போது தனது சுய விருப்​பத்​தின் அடிப்​படை​யில் இந்த திட்​டத்தை (Optional Travel Insurance Scheme – OTIS) தேர்வு செய்​ய​லாம்.

இதற்கு தற்​போது ஒரு பய ணிக்​கு, ஒரு பயணத்​துக்​கு, அனைத்து வரி​கள் உட்பட வெறும் 45 பைசா பிரீமி​யம் செலுத்​தி​னால் போதுமானது. பிறகு காப்​பீட்டு நிறு​வனத்​திடம் இருந்து நேரடி​யாக இப்​பயணி​களின் மொபைல் அல்​லது மின்​னஞ்​சல் ஐடிகளுக்கு எஸ்​எம்​எஸ் மூலம் பாலிசி தொடர்​பான விவரம் வந்​துசேரும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in