தேர்தல் ஆணையம் முன்பு போராட்டம் நடத்திய வழக்கில் திரிணமூல் தலைவர்கள் விடுவிப்பு

தேர்தல் ஆணையம் முன்பு போராட்டம் நடத்திய வழக்கில் திரிணமூல் தலைவர்கள் விடுவிப்பு

Published on

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் மத்​திய விசா​ரணை அமைப்​பு​களான சிபிஐ, என்​ஐஏ, அமலாக்​கத் துறை மற்​றும் வருமானவரி துறைக்கு எதி​ராக திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த தலை​வர்​கள் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​துக்கு முன்பாக போ​ராட்​டம் நடத்​தினர்.

அப்​போது, பாஜக தலை​மையி​லான மத்​திய அரசின் உத்​தர​வின்​பேரில் மத்​திய புல​னாய்வு அமைப்​பு​கள் எதிர்க்​கட்​சிகளை குறிவைப்​ப​தாக அவர்​கள் குற்​றம்​சாட்​டினர். 144 தடை உத்​தரவு அமலில் இருந்த நிலை​யில் அதனை மீறி தேர்​தல் ஆணைய அலு​வல​கத்​தின் முன்பு போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தாக கூறி திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர்​கள் மீது டெல்லி காவல் துறை வழக்​குப் பதிவு செய்​தது.

இந்த வழக்கு நேற்று டெல்லி நீதி​மன்ற கூடு​தல் தலைமை நீதித்​துறை மாஜிஸ்​திரேட் நேஹா மிட்​டல் முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, இந்த வழக்​கி​லிருந்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி தலை​வர் டெரிக் ஓ பிரையன் உட்பட 10 பேரை விடு​விப்​ப​தாக நீதிபதி அறி​வித்​தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in