மதம் மாற்றி தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த உ.பி.யில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு

மதம் மாற்றி தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த உ.பி.யில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு

Published on

பிரயாக்ராஜ்: மதம் மாற்றி தீவிர​வாதச் செயல்​களில் ஈடு​படுத்த உத்​தரபிரதேசத்​திலிருந்து கடத்தி வரப்​பட்ட 15 வயது சிறுமியை போலீ​ஸார் மீட்​டுள்​ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்​தீப் சிங் குணாவத் கூறிய​தாவது: உத்​தரபிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜ் மாவட்​டம் பூல்​பூர் பகு​தி​யைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒரு​வரை கடந்த மே 8-ம் தேதி 19 வயதான தர்க்​சனா பானு என்​பவர் கேரளாவுக்கு கடத்​திச் சென்​றுள்​ளார்.

மதமாற்​றம் செய்​ய​வும், தீவிர​வாதச் செயல்​களில் ஈடு​பட​வும் அவரைக் கடத்​திச் சென்​ற​தாகத் தெரி​கிறது. ஆனால் அந்த சிறுமி, பானு​விட​மிருந்து தப்​பித்து திருச்​சூர் ரயில் நிலை​யத்​துக்கு வந்து போலீ​ஸாரிடம் தகவல் தெரி​வித்து அங்​கிருந்து தனது தாய்க்கு போன் செய்​துள்​ளார்.

இதைத் தொடர்ந்து பிர​யாக்​ராஜ் போலீ​ஸார் அங்கு சென்று சிறுமியை மீட்​டனர். மேலும் பானு, அவரது கூட்​டாளி முகமது கைஃப் ஆகிய 2 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். சிறுமி​யின் தாய் கொடுத்த புகாரின் பேரில் தற்​போது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

சிறுமி​யின் தாய் தற்​போது கொலை மிரட்​டல் வரு​வ​தாக புகார் செய்​துள்​ளார். சிறுமியை, பானு டெல்லி ரயில் மார்க்​க​மாக அழைத்​துச் சென்​றுள்​ளார். பின்​னர் சிறுமியை அவர்​கள் கேரளா​வுக்கு அழைத்​துச் சென்​றுள்​ளனர். முதலில் பணம் கொடுப்​பது போல கொடுத்து மதமாற்​றம் செய்​ய​வும், பின்​னர் தீவிர​வாதச் செயல்​களில் ஈடு​பட​வேண்​டும் என்றும் சிறுமிக்கு அவர்​கள் அழுத்​தம் கொடுத்​துள்​ளனர்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தா​ர்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in