Last Updated : 03 Jun, 2025 07:37 AM

 

Published : 03 Jun 2025 07:37 AM
Last Updated : 03 Jun 2025 07:37 AM

பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை அறிமுக விழா: மத்திய அரசுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தியது

பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை அறிமுக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சிலையை நிறுவ 34 ஆண்டுக்கு முன்பே கோரிக்கை வைத்த பாஷா சங்க தலைவர் மறைந்த கிருஷ்ண சந்த் கவுடுவின் மனைவி ரேகா கவுடுக்கு, விழா விருந்தினர்கள் மரியாதை செய்தனர். (வலமிருந்து இடம்) பாஷா சங்க முன்னாள் பொதுச் செயலாளர் முனைவர் எம்.கோவிந்தராஜன், இந்து தமிழ் திசை நாளிதழ் டெல்லி செய்தியாளர் ஆர்.ஷபிமுன்னா, வாராணசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம், பிரயாக்ராஜ் டிஐஜி டாக்டர் என்.கொளஞ்சி மற்றும் பிரயாக்ராஜ் அருங்காட்சியக இயக்குநர் ராஜேஷ் பிரசாத்.

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் மகா கும்​பமேளா​வின்போது நிறு​வப்​பட்ட திரு​வள்​ளுவர் சிலைக்கு அறி​முக விழா நடத்​தப்​பட்​டது. பாஷா சங்​கம், மத்​திய கலாச்​சா​ரத் துறை, சென்னை சிஐசிடி​யுடன் இணைந்து இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்​திய விழா​வில் தமிழர்​களான உத்தர பிரதேச மாநில அரசு அதி​காரி​கள் பங்​கேற்​றனர். உ.பி.​யின் பிர​யாக்​ராஜில் மொழிகளை பால​மாக்கி தேச ஒற்​றுமைக்​காக 49 ஆண்​டு​களாக செயல்​படும் பொதுநல அமைப்பு பாஷா சங்​கம்.

இந்த சங்​கம் கடந்த 34 ஆண்​டு​களாக பிர​யாக்​ராஜில் திரு​வள்​ளுவர் சிலை வைக்க வலி​யுறுத்தி வந்​தது. அந்த முயற்​சி​யில் கடந்த 10 ஆண்​டு​களாக இந்து தமிழ் திசை நாளிதழும் தொடர்ந்து செய்​தி​கள்​வெளி​யிட்​டு, பல்​வேறு வகை​களில் உதவியது. இறு​தி​யில் பிர​யாக்​ராஜ் டிஐஜி​யாக நியமிக்​கப்​பட்ட தமிழர் டாக்​டர் என்​.​கொளஞ்சி முயற்​சி​யால், மகா கும்​பமேளா விழா​வின் போது திரு​வள்​ளுவர் சிலை நிறு​வப்​பட்​டது.

இதர பல சிலைகள் நிறு​வப்​பட்டு அவற்​றுக்​கான திறப்பு விழா நடத்​த​வும், அதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​க​வும் திட்​ட​மிடப்​பட்​டது. ஆனால், மகா கும்​பமேளா​வில் கோடிக்​கணக்​கில் மக்​கள் குவிந்து நெரிசல் அதி​க​மான​தால் விழா நடை​பெற​வில்​லை. இதனால், திரு​வள்​ளுவர் சிலைக்​கான அறி​முக விழாவை பாஷா சங்​கம், மத்​திய கலாச்​சா​ரத் துறை, அலகா​பாத் அருங்​காட்​சி​யகம், செம்​மொழி தமிழாய்வு மத்​திய நிறு​வனம் (சிஐசிடி) ஆகிய​வற்​றுடன் ’இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து நடத்​தின.

மத்​திய அரசின் அருங்​காட்​சியக அரங்​கில் நடை​பெற்ற விழா​வில் வாராணசி மண்டல ஆணை​யர் எஸ்​.​ராஜலிங்​கம் உரை​யாற்​றி​னார். அப்​போது, ‘‘இங்கு திரு​வள்​ளுவர் சிலை நிறுவ கோரிக்கை விடுத்த பாஷா சங்​கம், அதற்கு உதவிய இந்து தமிழ் திசை நாளிதழ், டிஐஜி கொளஞ்சி ஆகியோ​ருக்கு எனது பாராட்​டுக்​கள்.

அறம், பொருள், இன்​பம் என 1330 குறள் எழு​தி​யது திரு​வள்​ளுவரின் தனித்​து​வம். அவர் தம் குறளில் தமிழ் எனும் வார்த்​தையை எங்​குமே பயன்​படுத்​த​வில்​லை. இது​போன்ற காரணங்​களால்​தான் அது உலகப் பொது​மறை​யாகக் கருதப்​படு​கிறது. தமிழகத்​துக்கு வந்த மகாத்மா காந்தி மூலமொழி​யானத் தமிழைக் கற்று திருக்​குறளைப் படிக்க விரும்​பி​னார்’’ எனத் தெரி​வித்​தார்.

பிர​யாக்​ராஜ் டிஐஜி டாக்​டர் என்​.​கொளஞ்சி பேசும்போது, ‘‘வெறும் ஏழு சொற்​களில் ஒரு குறள் ஆழமானக் கருத்​துக்​களை கொண்​டது. பிரதமர் அறி​முகப்​படுத்​திய யோகா தினம் போல், உலகத் திருக்​குறள் நாள் அல்​லது திரு​வள்​ளுவர் நாள் என சர்​வ​தேச அளவில் அறி​முகப்​படுத்த வேண்​டும். கல்​வித் திட்​டத்​தில் தேசிய அளவில் பள்ளி மாணவர்​களுக்கு ஒரு குறளை​யா​வது போதிக்க வேண்​டும்.

நம் நாட்​டின் தேசிய பறவை, விலங்​கு, மலரை போல், தேசிய நூலாக திருக்​குறள் அறிவிக்​கப்பட வேண்​டும். வட மாநிலங்​களில் ஒரு மனிதன் பிறக்​கும் போதே இறைவ​னால் எல்​லாம் நிர்​ண​யிக்​கப்​பட்​டு​விட்​ட​தாக நம்​பிக்கை உண்​டு. ஆனால், தெய்​வத்​தால் ஆகாதெனினும்.. எனும் குறளின்​படி இறைவ​னால் முடி​யாததை​யும் மனிதர் தன் முயற்​சி​யால் வெல்ல முடி​யும். எனவே, இங்​குள்​ளவர்​கள் ஒரு நாளுக்கு ஒரு குறளாவது படித்​தறிவது நல்​லது’’ என்று அறி​வுறுத்​தி​னார்.

இந்து தமிழ் திசை நாளிதழின் டெல்லி செய்​தி​யாளர் ஆர்​.ஷபி​முன்னா பேசுகை​யில், ‘‘ஒவ்​வொரு மதத்​துக்​கும் ஒரு மறைநூல் உள்​ளது. ஆனால், அனைத்து மதத்​தினரும் ஏற்​கும் ஒரே பொது நூலாக திருக்​குறள் அமைந்​துள்​ளது. தமிழகத்​தில் நண்​பர்​கள், தம்​ப​தி​கள், அரசி​யல்​வா​தி​கள், அதி​காரி​கள் உள்​ளிட்ட அனைத்து பிரி​வினருக்கு இடை​யில் நடை​பெறும் உரை​யாடல்​களில் திருக்​குறள் இடம்​பெறும். உ.பி.​யிலும் அது​போன்ற நிலை உரு​வாக இங்கு திரு​வள்​ளுவர் சிலை அவசி​யம். எனவே​தான் இந்து தமிழ் திசை நாளிதழ் அதற்​கான முயற்​சிக்கு உதவுவ​தில் தீவிரம் காட்​டியது’’ என்​றார்.

விழா​வில் பிர​யாக்​ராஜ் நகர மேயர் கணேஷ் சந்​திர கேசர்​வாணி​யும் கலந்து கொண்​டார். சிஐசிடி இயக்​குநர் முனை​வர் சந்​திரசேகரன் உரையை, மூத்த ஆய்​வாளர் முனை​வர் என்​.தேவி வாசித்​தார். அலகா​பாத் அருங்​காட்​சியக இயக்​குநர் முனை​வர் ராஜேஷ் பிர​சாத், பாஷா சங்க முன்​னாள் பொதுச் செய​லா​ளர் முனை​வர் எம்​.கோ​விந்​த​ராஜன், ஏ.கே.மிஸ்ரா ஆகியோர் உரை​யாற்​றினர். பாஷா சங்​கத்​தின் ஆனந்த் கில்​டி​யால் வரவேற்​புரை​யும், சாந்தி சவுத்ரி நன்​றி​யுரை​யும் வழங்​கினர்.

திருக்​குறள் மொழிபெயர்ப்பு நூலை, வாராணசி​யின் காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி வெளியிட்டிருந்தார். மத்​திய அரசின் செம்​மொழி தமிழாய்வு மத்​திய நிறு​வனம் (சிஐசிடி) வெளி​யீ​டான அந்​நூலின் அறி​முக விழா​வும் நடை​பெற்றது. விழா​வில் பங்​கேற்​றவர்​களுக்கு சிஐசிடி சார்​பில் திரு​வள்​ளுவரின் சிறிய உரு​வச் சிலை, திருக்​குறள் இந்தி நூல் ஆகியவை வழங்​கப்​பட்​டன. உ.பி.​யில் திரு​வள்​ளுவர் சிலை அமைக்க முதன்​முதலில் கோரிக்கை வைத்​த பாஷா சங்​க
பொதுச்​ செய​லா​ளர்​ மறைந்​த கே.சி.க​வுடு​வின்​ மனை​வி ரேகா கவுடுவை விருந்​தினர்​கள்​ ​பா​ராட்​டி கவுரவித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x